இன்றைய செய்தி

Post Top Ad

01 September 2021

அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கு நிர்ணய விலை..!!


அரிசி மற்றும் சீனி என்பனவற்றுக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கபட இருப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். 

அதன்படி, நாளைதினம்  தொடக்கம் குறித்த பொருட்களை நிர்ணய விலைக்கு ஏற்ப பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்து நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment

Post Top Ad