இன்றைய செய்தி

Post Top Ad

02 September 2021

நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!




நாட்டில் உணவு பற்றாக்குறை தொடர்பில் மக்கள் அச்சப்பட தேவையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்தோடு போதியளவு உணவு கையிருப்பில் இருப்பதால், உணவுப் பற்றாக்குறை தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது நாட்டில் அரிசி மற்றும் சீனிக்கு பற்றாக்குறை நிலவுவதாக வதந்திகள் கிளம்பியுள்ள நிலையில் அது உண்மைக்கு புறம்பானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
நாட்டு மக்களுக்கு தேவையான அரிசி மற்றும் சீனி தற்போது கையிருப்பில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அத்தோடு உணவுப் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்ததாக உள்நாட்டு, வெளிநாட்டு, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியை அரசாங்கம் மறுத்துள்ளது. 
மேலும், செயற்கை உணவு பற்றாக்குறையை முறையடிப்பதற்க்காகவே அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad