பரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஈட்டி எறிதல் போட்டியில் சுமித் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்,
தனது முதல் வாய்ப்பிலே 66.95 மீட்டருக்கு ஈட்டி எறிந்து சுமித் அசத்தியிருந்தார், மேலும் அடுத்தடுத்தாக 68.06, 65.27, 68.55, மீட்டர் ena ஈட்டி எறிந்து பிரம்மிக்க வைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் கடந்த ஆண்டு கொரோன காலங்களில் வீட்டில் தனது வயல் நிலங்களில் பயிற்சி செய்வதாகவும், தனது ஊரில் புதிய சாலைகள் அமைக்கும் இடங்களில் மணல் குவியல்களில் 3 மாதம் பயிற்சி செய்வதாகவும் பிறகு ஸப்போட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தன்னை அழைத்ததாகவும் கூறினார் ஆரம்பத்தில் தான் மிகவும் சிரமப்பட்டதாகவும் செயற்கை, புற்தரை மாற்று இடங்களில் கால்களை வைக்க நடுங்கியதாகவும் இருப்பினும் தனது முயற்சிகளை கைவிடவில்லை என்று சுமித் கூறினார்.
மேலும் 2016 ஆம் ஆண்டில் தான் நீரோஜ் சோப்ராவை பார்த்த பிறகுதான் இப்படி ஒரு விளையாட்டு இருப்பதை அறிந்தேன் அதிலிருந்தே ஈட்டி எறிவதில் கடினமாக உழைத்தேன், இந்தியாவில் இது குறித்து அறிதல் அவ்வளவாக இல்லை இது குறித்து விழிப்புணர்வு ஏற்கப்பட்டால் ஈட்டி எறிதல் போட்டிகளிலும் இந்தியாவில் உலக சாம்பியன்களை உருவாக்குவது உறுதி என்றார்.
No comments:
Post a Comment