கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றியடைந்துள்ள போதும் அறுதிப்பெரும்பான்மையை பெற தவறியிருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரரண்டு ஆண்டுகளில் கனடாவில் இடம்பெற்ற இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் மொத்தமுள்ள 338 இடங்களில் 170 இடங்களைப் பிடிப்பதால் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க முடியும். இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் ட்ரூடோவின் கட்சிக்கு 155 இடங்கள் கிடைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments:
Post a Comment