நீர்கொழும்பு மா ஓயா நீரேந்துப் பகுதியில் நேற்று 16 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விஷேட சோதனையின் போது, நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பாரியளவிலான (1,162 கிலோ கிராமிற்கும் அதிகம்) உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகள் உட்பட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், நீர்கொழும்பில் வசிப்பிடமாக கொண்டவர்கள் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் உட்பட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க, சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment