கடந்த 24 மணித்தில் நாட்டில் மூன்று பிரதேசங்களில் 3 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது தொடங்கொடை, வெலிவேரிய மற்றும் எல்ல ஆகிய பிரதேசங்களிலேயே இந்த கொலை சம்பவங்களானது இடம்பெற்றுள்ளன.
தொடங்கொடை, கஜுதூவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை (வயது 46) பொல்லு ஒன்றால் தாக்கியதன் மூலம் கொலை செய்துள்ளார்.
நேற்று காலையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடன்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, வெலிவேரிய, நேதுன்கமுவ பகுதியில் பேரன் ஒருவர் தனது பாட்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதால் கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த கொலை சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளது இதில் 74 வயதுடைய நேதுன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்பான சந்தேகநபரான பேரன் கைது செய்யப்பட்டு வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, எல்ல பொலிஸ் பிரிவின் உடுவர தோட்டம், மேல் பிரிவு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலினால் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
28 வயதுடைய நேபியர் தோட்டம் மேல் பிரிவை சேர்ந்த இளைஞன் ஒருவரே அந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பட்டனர்.
மோதலுக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை இந்நிலையில் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment