இன்றைய செய்தி

Post Top Ad

04 October 2021

உலகின் மிகப்பெரிய கப்பல் இலங்கை வருகை...!

 


உலகின் மிகப்பெரிய கப்பலான எவரெஸ் கப்பல் நாளை ஐந்தாம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகிறது நெதர்லாந்து ரோட்டர்டம் துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு சுயஸ் கால்வாய் ஊடாக வருகை தர உள்ளது.

இவ ராட்சத கப்பல் ஆனது 400 மீட்டர் நீளமும் 62 மீட்டர் அகலமும் கொண்டதுடன் 23 ஆயிரத்து 992 கொள்கலன்களை சுமந்து வருகிறது மேலும் இந்த கப்பலை உலகின் 24 துறைமுகங்களில் நிறுத்தி வைப்பதற்கு அனுமதி உண்டு அதில் தெற்காசியாவில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது, காரணம் தெற்காசியாவில் கொழும்பு துறைமுகத்திற்கு மாத்திரம் இந்த கப்பலை அனுமதிக்கும் ஆழமும் கொள்ளளவும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad