நேற்றைய தினம் 4-ஆம் தேதி பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் சுமார் 6 மணித்தியாலங்கள் முடக்கப்பட்டது
உலகில் வாழும் மக்களில் அதிகமானோர் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர் இவற்றின் மூலம் வீடியோக்கள், போட்டோக்கள்,டாக்குயுமென்ட், காணொளிகள் என்பன பகிரப்பட்டு வருகிறது குறிப்பாக வாட்ஸ்அப்பை இதற்கு குறிப்பிடலாம் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு சமூகவலைதளம் இதனை பேஸ்புக் நிறுவனம் கொண்டு நடாத்தி வருகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் அனைத்து சமூக வலைதளங்களும் இரவு 9.30பி.ப இருந்து சுமார் 6 மணித்தியாலங்கள் மூடக்கப்பட்டிருந்தது இது இலங்கையில் மாத்திரமின்றி உலகின் பல நாடுகளிலும் சமூக வலைதள பயன்பாடு முடக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது, இதனால் சமூக வலைத்தளவாசிகள் பெரும்பாலானவர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
No comments:
Post a Comment