சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ஊரெழு பகுதியில் கடமையில் போலீசார் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் முறையற்ற விதத்தில் தலையில் தலைக்கவசம் இல்லாது பைக்கில் சென்ற இருவரை போலீசார் வழிமறித்து சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட வாகனத்திற்கு உரிய ஆவணங்களை சோதனையிட்டு முறையற்ற விதத்தில் வாகனத்தில் வந்த படியினால் தண்டனை பத்திரம் எழுத முயன்ற போது அங்கு வந்த வலி-கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் அங்கு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலீசாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டார்.
முரண்பாடு முற்றிய நிலையில் உத்தியோகத்தர் வந்த வாகனத்தை நோக்கி பொலீசார் 2 தடவை துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்துள்ளனர் இதனால் சற்று பதட்டமான சூழ்நிலை அங்கு நிலவியது, இதன்காரணமாக தமது கடமைகளை செய்ய இடையூறாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவரும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பிரதேச சபை உறுப்பினர் தன்னை ஈபிடிபி கட்சி உறுப்பினர் என்று அறிமுகப்படுத்தி பலதடவை போலீசாருடன் வாக்குவாதம் மேற்க்கொண்டு கடமையை செய்ய விடாது அதற்கு இடையூறாக இருந்ததார் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment