கற்பிட்டி பகுதியில் 720 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வட மேற்கு கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே நேற்றைய தினம் 2ஆம் திகதி சனிக்கிழமையன்று இவ் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேகத்திற்கிடமாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக குறித்த கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேப் ரக வாகனம் ஒன்றை கடற்படையினர் சோதனைக்கு உட்படுத்தியபோது அதில் 20 முறைகளில் 720 கிலோ உலர்ந்த மஞ்சள் இருப்பது கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது இது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என கண்டு கொள்ளப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் சந்தேகத்துக்கு இடமான நபரும் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார நடைமுறைகளுக்கமைய தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டு கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment