இலங்கையின் இளம் பாடகியானயொஹானி இந்தியாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய நிலையில் திடீர் விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இவர் இந்தியாவில் அரியானா மாநிலம்,குருக்ரம் மற்றும் தெலுங்கு மாநிலம் ,ஹைதராபாத்தில் நடைபெறவிருந்த சூப்பர் மூன் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து கடந்த 30 ஆம் திகதி செப்டம்பர் மாதம் வியாழக்கிழமை அரியானா மாநிலத்தின் குருக்ரம் பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் வைத்தே இடம்பெற்றளுள்ளது.
அதாவது இசை நிகழ்ச்சியின்போது கிட்டார் இசைக்கருவி தவறுதலாக அவரது முகத்தில் பட்டது அதனால் சிறு காயங்களும் ஏற்ப்பட்டது ஆனால் அவற்றை அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யொஹானி இன்றைய தினம் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment