மன்னர் பொலிசாரினால் இன்றைய தினம் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார் மன்னார் எருக்கலம்பிட்டி புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தகரே இவ்வாறு மரணமடைந்துள்ளார், கைது செய்யப்பட்ட நிலையில் சுகவீனமுற்று அவரை மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ரம்ஸான் என்னும் இளம் குடும்பஸ்தர் ஆவார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவர் புதுக்குடியிருப்பு பகுதிக்கு சென்று திரும்பிய போது அந்தப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போலீசார் குறித்த இருவரையும் அவர்கள் சென்ற முச்சக்கர வண்டியையும் சோதனைக்கு உட்படுத்தியபோது இருவரும் போதைப் பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த இருவரும் இன்றைய தினம் 2ஆம் திகதி மாவட்ட நீதவான் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தபோது 29 வயதுடைய ரம்ஸான் என்னும் இளம் குடும்பஸ்தர் திடீர் சுகவீனமுற்று மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது உறவினர்கள் கூறுகையில் குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலை பொலிசாரினால் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment