இன்றைய செய்தி

Post Top Ad

21 August 2021

16 வயது சிறுமி மாயம் - தீவிர தேடலில் பொலிஸார்!!!

 



மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளார்

தனது உறவினர் வீட்டுக்கு ஆடை தைப்பதற்காக சென்ற நிலையிலேயே 16 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளதாக அவரது அம்மம்மா முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளளார்.

புதுக்குடியிருப்பு புளியடி வீதியைச் சோந்த 16 வயதுடைய தவராசா சசீக்கா என்னும் சிறுமியே காணாமல் போயுள்ளார். 
குறித்த சிறுமியின் தந்தையார் இல்லாத நிலையில் தாயார் மறு திருமணம் செய்து சென்றுள்ளதால் காணாமல் போன சிறுமியும் அவரது அக்காவும் அவர்களுடைய அம்மம்மா பராமரிப்பில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது புதன்கிழமை சிறுமியின் சகோதரி வேலைக்கு சென்ற நிலையில் பி.ப 1.30 மணியளவில் தனது உறவினரின் வீட்டில் ஆடை தைப்பதற்கு செல்வதாக அம்மம்மாவிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத சிறுமியை தேடியபோதும் அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை. எனவேதான் சிறுமி காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சிறுமியின் அம்மம்மா முறைப்பாடு செய்துள்ளர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad