இன்றைய செய்தி

Post Top Ad

31 May 2022

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.

 



 நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை இன்றுமுதல் அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.


 இவ் இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான  மழைவீழ்ச்சி பதிலாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


 ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட இடங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.


.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad