இன்றைய செய்தி

Post Top Ad

04 June 2022

இரண்டு வேளை உணவு ஒருவேளையாக கூட மாறலாம் - நெருக்கடி குறித்து ரணில் கடும் எச்சரிக்கை.

      இரண்டு வேளை உணவு ஒருவேளையாக கூட மாறலாம்


வரும்காலங்களில் இந்த நாட்டில் பலர் இரண்டு வேளை உணவையே ஈடுசெய்ய வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ரஷ்யா, உக்ரைனும் உடனான போரினால் நாட்டின் பொருளாதார  மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.


 இதன் போது பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இப்போதுதான் ஆரம்பமாகிவிட்டது என்றும், உக்ரைன்-ரஷ்யா போரின் முழு தாக்கத்தை இலங்கை இன்னும் அனுபவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.எதிர்வரும் செப்டெம்பர் மாத கால கட்டத்தில்உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனவும், இதன் தாக்கம் 2024ஆம் ஆண்டு வரை இலங்கையில் நீடிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


 உலகளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு மேலதிகமாக யால மற்றும் மஹா பருவங்களில் பயிர்களை பயிரிடுவதில் தோல்வியடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக இந்நாட்டு மக்கள் ஒரு நாள் மட்டுமே உண்ண வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad